ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இந்த கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 5.9%-ல் இருந்து 6.25% ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 2023-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 7%-ல் இருந்து 6.8% ஆக சரியும் என்றும், பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.